பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் வேலு
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் வேலு பெற்றுக்கொண்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் வேலு பெற்றுக்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பேசும்போது விரைவில் நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என கூறினார்.
அமைச்சர் எ.வ.வேலு கடந்த நான்கு மாதங்களாக திருவண்ணாமலை முகாம் அலுவலகம், அரசு விழாக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் அனுப்பி வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் .பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் வெற்றிவேல், வட்டாட்சியர் சுரேஷ், உட்பட அரசு அலுவலர்கள், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.