/* */

திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலை பணிகள் துவக்கம்

கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலை பணிகள் துவக்கம்
X

நான்கு வழி சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணி துவக்க விழா திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார் .நெடுஞ்சாலை பராமரிப்பு தலைமை செயற்பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ராஜன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ. வ. வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை இருவழி சாலையை நான்கு வழி சாலையாக ரூபாய் 121 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை செய்து பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டில் விபத்து எங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க அனைத்து சாலைகளும் தரமாகவும் முழுமையாகவும் போடப்பட்டு வருகிறது. இரு வழி சாலைகளில் பல்வேறு இடங்களில் தடுப்பில்லாததால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஆகையால் தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க இரு வழி சாலைகள் அனைத்தையும் நான்கு வழி சாலையாக மாற்றி சாலைகள் போடும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதல்வரின் ஆணையை ஏற்று தனது கடமையை தான் செய்து வருகிறேன், தமிழ்நாடு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2200 கிலோமீட்டர் சாலையை நான்கு வழி சாலை ஆகவும் 6700 கிலோ மீட்டர் சாலைகளை இரு வழி சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே உள்ள சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கிராமங்களுக்கு புறவழி சாலைகள் அமைக்கும் பணிகளும் தமிழக அரசின் சார்பில் தற்போது நடைபெற்று வருகிறது. மனித உயிர் என்பது விலை மதிக்க முடியாதது, அதனை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இருவழி சாலைகளையும் நான்கு வழி சாலைகளாக மாற்ற திட்டம் தீட்டி பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசுத்துறை அதிகாரிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 March 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி