Begin typing your search above and press return to search.
சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒவ்வொரு துறைகள் சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளை அந்தந்த துறை அதிகாரிகள் விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
நலத்திட்ட உதவிகள் வழங்க தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன், கோட்டாட்சியர் வெற்றிவேல், மற்றும் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.