/* */

குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்கள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடந்த தர்ணா போராட்டங்கள்

HIGHLIGHTS

குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்கள்
X

பார்வதி, அவரது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நேற்று காலை முதல் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் வரவேற்றார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் மாலை வரை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அடையாள அட்டை, வீட்டுமனை பட்டா, இலவச வீடு, சாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

திருவண்ணாமலை தாலுகா மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த காசி என்பவர் கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருக்கு பிரதமரின் இலவச வீடு ஒதுக்கப்பட்டு, பணி ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அவரை போலீசார் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் முடிந்து சிறிது நேரத்திலேயே ஆரணி தாலுகா தாமரைப்பாக்கம் லாடவரம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் மனைவி பார்வதி, அவரது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களது நிலத்தில் பக்கத்து நிலத்துகாரர் பைப் லைனை உடைத்து விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்து நடவடிக்கை இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் உரிய நடடிவக்கை வேண்டும்' என்றனர்.

பின்னர் அவர்களை போலீசார் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

Updated On: 5 April 2022 1:44 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்