/* */

ஆட்சியர் செய்த ஏற்பாடு: ஐந்து நிமிடத்தில் தரிசனம், பக்தர்கள் மகிழ்ச்சி

கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பக்தர்கள் ஐந்து நிமிடத்தில் சாமி தரிசனம் செய்ய ஆட்சியர் ஏற்பாடு செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

HIGHLIGHTS

ஆட்சியர் செய்த ஏற்பாடு: ஐந்து நிமிடத்தில் தரிசனம்,  பக்தர்கள் மகிழ்ச்சி
X

கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளை விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர்

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபாடு செய்கின்றனர்.

இந்நிலையில் பௌர்ணமி தினமான நேற்று முன்தினம் நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராஜகோபுரம் அருகே அவர் ஆய்வு மேற்கொண்ட போது , பொது தரிசன வரிசையில் ஏராளமான தாய்மார்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்கள் என பலர் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக கோயில் ஊழியர்களை வரவழைத்து கியூ லைனில் காத்திருந்த தாய்மார்கள் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை

ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கம்பத்து இளையனர் சன்னதி அருகே நாற்காலிகள் வரவழைக்கப்பட்டு அமர வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்களை சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மிக விரைவாக செய்தார்.

அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் அவர்களை நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய வழி ஏற்படுத்தி அவர்களோடு மாவட்ட ஆட்சியரும் சென்று அவர்களை ஐந்து நிமிடத்தில் சாமி தரிசனம் செய்ய வைத்து அவர்களை அனுப்பி வைத்தார். இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன , குடிநீர் வசதி, கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, கிரிவலப் பாதையில் 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கோவிலுக்குள் 100 இடங்களில் குடிநீர் குழாய், ஆறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோவிலுக்கு வரும் தாய்மார்கள் முதியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு நேரடியாக சாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தி அமர வைத்து உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் பௌர்ணமி நாட்கள், விடுமுறை நாட்களில் இதுபோன்று தனி வரிசை அமைத்து அவர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் அனைத்து பக்தர்களும் விரைந்து தரிசனம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் , அறங்காவலர்கள், திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் உடனிருந்தனர்

Updated On: 27 Feb 2024 5:05 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...