/* */

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறைமேற்கொண்ட ர் திடீர் சோதனையில் சுமார் ரூ.3 லட்சம் பறிமுதல்

HIGHLIGHTS

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
X

திருவண்ணாமலை  நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குனரான மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் நகரில் 4 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலத்திற்கு கட்டிட அங்கீகாரம் வழங்க லஞ்சம் கேட்பதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அந்த அலுவலகத்தின் எதிரில் உள்ள இடைத்தரகர்கள் அலுவலகங்களிலும் சோதனை செய்யப்பட்டது.

சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.3 லட்சம் அந்த அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது.

ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தகுதியில்லாத மனைகளுக்கு பல மாதங்களாக லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதி இல்லாத மனைகளுக்கு அனுமதி அளித்தது தெரியவந்துள்ளது.

அலுவலகம் இயங்கும் நேரத்தில் கணக்கில் வராத பணம் கட்டுக் கட்டாக பிடிபட்டது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 Oct 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...