/* */

திருநேர் அண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்த அற்புத காட்சி

திருவண்ணாமையில் அருணாசலேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் காட்சியை, பக்தர்கள் கண்டு வழிபாட்டனர்.

HIGHLIGHTS

திருநேர் அண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்த அற்புத காட்சி
X

திருவண்ணாமலை கிரிவல்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதப் பிறப்பின் முதல் நாளன்று, திரு நேர் அண்ணாமலையார் மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம். அதன்படி, சித்திரை மாத முதல்நாளான இன்று அதிகாலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு காலை 7 மணிமுதல் 7.10 மணி வரை நடைபெற்றது. அப்போது, திருநேர் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதை காண அதிகாலை, 5:00 மணியிலிருந்தே ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். சூரிய ஒளி மூலவர் மீது விழுந்ததும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 14 April 2022 8:27 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...