/* */

திருவள்ளூர்:வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பிப்புக்கு சிறப்பு சலுகை!

Thiruvallur Employment Office-திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மற்றும் புதுப்பித்தல் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை- மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு.

HIGHLIGHTS

Thiruvallur Employment Office
X

Thiruvallur Employment Office

Thiruvallur Employment Office-திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மற்றும் புதுப்பித்தல் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள தகவலின்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணத்தால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கியுள்ளது.

இச்சலுகையை வரும் ஆகஸ்டு 27ம் தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்கொண்ட தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 April 2024 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...