உள்ளாட்சி தேர்தலையாெட்டி தூத்துக்குடியில் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.
HIGHLIGHTS
ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியிடங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 06.10.2021-ல் முதற்கட்ட தேர்தல் நடைபெறுவதால் டாஸ்மாக் கடை எண் 10007 கொடியங்குளம், 10028 அய்யனாரூத்து டாஸ்மாக் கடைகள், 04.10.2021 காலை 10 மணி முதல் 06.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும்,
09.10.2021-ல் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுவதால் டாஸ்மாக் கடை எண் 10083 குலசேகரப்பட்டணம், 9947 தருவைகுளம், 9963 பரிவல்லிக்கோட்டை, 10032 குறுக்குச்சாலை, 9986 காயாமொழி, 10094 மெய்ஞ்ஞானபுரம், 10064 அய்யனேரி, 10067 இளையரசனேந்தல் டாஸ்மாக் கடைகள், 07.10.2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும்
மற்றும் 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் டாஸ்மாக் கடை எண் 10153, 10154, 10149 திருச்செந்தூர், 9988, 10030, 10058 உடன்குடி, 9917, 10036, 10047 ஓட்டப்பிடாரம், 9994, 9995 விளாத்திகுளம், 10146 புதூர், 9935, 10069, 10158 ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)ன் படி மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.