/* */

உள்ளாட்சி தேர்தலையாெட்டி தூத்துக்குடியில் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலையாெட்டி தூத்துக்குடியில் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியிடங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 06.10.2021-ல் முதற்கட்ட தேர்தல் நடைபெறுவதால் டாஸ்மாக் கடை எண் 10007 கொடியங்குளம், 10028 அய்யனாரூத்து டாஸ்மாக் கடைகள், 04.10.2021 காலை 10 மணி முதல் 06.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும்,

09.10.2021-ல் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுவதால் டாஸ்மாக் கடை எண் 10083 குலசேகரப்பட்டணம், 9947 தருவைகுளம், 9963 பரிவல்லிக்கோட்டை, 10032 குறுக்குச்சாலை, 9986 காயாமொழி, 10094 மெய்ஞ்ஞானபுரம், 10064 அய்யனேரி, 10067 இளையரசனேந்தல் டாஸ்மாக் கடைகள், 07.10.2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும்

மற்றும் 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் டாஸ்மாக் கடை எண் 10153, 10154, 10149 திருச்செந்தூர், 9988, 10030, 10058 உடன்குடி, 9917, 10036, 10047 ஓட்டப்பிடாரம், 9994, 9995 விளாத்திகுளம், 10146 புதூர், 9935, 10069, 10158 ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)ன் படி மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Oct 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...