/* */

தஞ்சையில் தடுப்பூசி 2வது தவணையை போட்டுக் கொண்ட கலெக்டர்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாடின்றி போதுமான அளவு இருப்பு உள்ளதாக இன்று 2 வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கலெக்டர் கோவிந்த ராவ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தஞ்சையில் தடுப்பூசி 2வது தவணையை போட்டுக் கொண்ட கலெக்டர்
X

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார், பின்னர் அவர் அளித்த பேட்டியில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, தேவைக்கேற்ப பெறப்பட்டு வருகிறது.

இதை போல் தஞ்சை மாவட்டத்தில் பிராண வாயு ஆன ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை, போதுமான அளவில் இருந்து வருகிறது. இதற்காக குழு அமைத்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர் தஞ்சை மாவட்டத்தில் கொரனோ பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்த அனுமதி பெற்றவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது அவ்வாறு வெளியே வந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவட்டத்தில் மூன்று பேருக்கு மேல் ஒரே இடத்தில் பாதிப்பு இருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இதுவரை 64 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கலெக்டர் கோவிந்தராவ்,

பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை இதுகுறித்து அச்சமின்றி பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 23 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!