தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய மாசி மக பெருவிழா தேரோட்டம்
2 பெரிய தேர்கள் அடங்கிய இந்த திருத்தேரோட்டத்தில் ஒரு தேரில் காசிவிஸ்வநாதர் சுவாமியும், உலகம்மாள் சுவாமியும் இணைந்து வீதி உலா வருகின்றனர்
HIGHLIGHTS
வரலாற்று சிறப்புமிக்க காசிவிஸ்வநாதர் கோயிலில் நடைபெற்று வரும் திருத்தேரோட்டத்தில் ஏராளனமான பக்தர்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்றான பாண்டியமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் வருடம் தோறும் மாசி மக பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான மாசி மக பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சூழலில், நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதனை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்ற சூழலில், சப்பர வீதி உலாவும் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 7-ம் திருநாளை முன்னிட்டு நடராஜ பெருமாள் எழுந்தருளிய தாண்டவ தீபாதாரணையும், புஷ்பாஞ்சலி நிகழும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிலையில், 9-ம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.
2 பெரிய தேர்கள் அடங்கிய இந்த திருத்தேரோட்டத்தில் ஒரு தேரில் காசிவிஸ்வநாதர் சுவாமியும், உலகம்மாள் சுவாமியும் இணைந்து வீதி உலா வருகின்றனர்.மற்றொரு, தேரில் நடராஜப்பெருமாள் வீதி உலா வந்து கொண்டிருக்கின்றனர். இந்த தேரை தற்போது ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி ரத வீதியில் இழுத்து வரும் சூழலில், பக்தர்கள் பக்தி கோசமிட்டபடி தேரை இழுத்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தரப்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.