நீர்நிலைகளில் அசம்பாவிதங்களைத் தடுக்க மீட்புப்படை காவலர்கள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மீட்புப்படை காவலர்களை எஸ்பி தீபாசத்தியன் நியமித்துள்ளார்
HIGHLIGHTS
கடந்த சில நாட்களாக தமிழகம். மற்றும்ஆந்திராவில் தொடர்மழை பெய்து வருகிறது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னையாறு, பாலாறு ஆகிய வற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏரிகள்மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. எனவே அவற்றில். உயிர்சேதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க இராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்தியன் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதில், ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளம் செல்லும்போது தரைபாலங்களின் மேல் மக்கள் நடப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதையும் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் குழந்தைகள் இறங்காமல் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். சாலைப்பள்ளங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும். எனவே அதிகாலை வேளையில் , இருட்டான நேரத்தில் வெளியே செல்லுவதைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும்,எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் , ஆளிநர்கள் 326 பேர் ,நன்கு நீந்தத்தெரிந்த தன்னார்வலர்கள் 85பேர் மற்றும் பேரிடர் பயிற்சி முடித்தவர்கள் 58 பேர் ஆகியோர் கொண்ட மீட்புப்படைக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்.தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்ட அவசர காவல் அறை கட்டுப்பாட்டு எண் 04172-271100 ,9884098100 எண்ணிற்கு பொதுமக்கள் அழைக்கலாம் என்று இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன் அறிவித்துள்ளார்..