/* */

பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவது குறித்து வட்டார வளமையத்தில் ஆலோசனை

பள்ளி செல்லா குழந்தைகளை நேரடியாக குடியிருப்புக்கே சென்று ஆய்வு செய்யும் பணியானது நாளை(டிச.19) தொடங்குகிறது

HIGHLIGHTS

பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவது குறித்து வட்டார வளமையத்தில் ஆலோசனை
X

 பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவது குறித்து வட்டார வளமையத்தில் ஆலோசனை கூட்டம்.

கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

பள்ளி செல்லா குழந்தைகளை நேரடியாக குடியிருப்புக்கே சென்று ஆய்வு செய்யும் பணியானது. வருகின்ற 19 /12/ 2022 முதல் 11/1/2023 முடிய நடைபெற இருக்கிறது. இதில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை முற்றிலுமாக நேரடியாக கள ஆய்வு செய்து அவர்களுடைய தற்போதைய நிலை குறித்து TNSED ADMINSTRATION செயலியில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட்டு, அனைவருக்கும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

மேலும் பள்ளி செல்லா இடை நின்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும். மாணவ, மாணவிகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டவுடன் அவர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலிமுத்து, சுரேஷ்குமார், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப் பாளர் அ‌.ரகமதுல்லா, சிறப்பாசிரியர்கள் அறிவழகன், ரம்யா, ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

Updated On: 18 Dec 2022 4:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு