புதுக்கோட்டையில் அமலானது இரவு நேர ஊரடங்கு
ஊரடங்கு மீறி செயல்பட்ட கடைகளை அடைப்பதற்கு காவல்துறை எச்சரித்தும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மெல்லமெல்ல குறைய தொடங்கிய நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்றாக இந்தியா முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு நேற்று புதிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. நோய்த்தொற்றை கட்டுப் படுத்தும் விதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதேபோல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஹோட்டல் மற்றும் கடைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கியது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு இன்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , புதுக்கோட்டை நகர பகுதிகளில் இரவு 10 மணி முதல் ஓட்டல்கள் மற்றும் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவைகளை அடைப்பதற்கு காவல்துறை வாகனத்தில் மூலம் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுத்தும் ஊரடங்கு மீறி செயல்பட்ட கடைகளை அடைப்பதற்கு காவல்துறை எச்சரித்தும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து புதுக்கோட்டை கீழராஜவீதி, மேல ராஜவீதி, பிருந்தாவனம், பழனியப்பா கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இயங்கும் அனைத்து ஹோட்டல் மற்றும் பெட்டி கடைகள் அடைக்கப்பட்டதால் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.