/* */

சேலம் மண்டல தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கு நாமக்கல்லில் பயிற்சி

சேலம் மண்டல அளவில், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் நடைபெற்றது.

HIGHLIGHTS

சேலம் மண்டல தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கு நாமக்கல்லில் பயிற்சி
X

நாமக்கல்லில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில், நகராட்சி சேர்மன் கலாநிதி பேசினார். 

சேலம் மண்டல நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மண்டல அளவிலான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை சேலம் மண்டல நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசும்போது, தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் நாள்தோறும், 30 வீட்டு உரிமையாளர்களை சந்தித்து குப்பைகளை பிரித்து கொடுப்பதன் அவசியம் குறித்து விளக்க வேண்டும்.

நீர்நிலைகளின் அருகில் குப்பைகளை கொட்டுவது மற்றும் தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை எடுத்து கூற வேண்டும் என தெரிவித்தார். நாமக்கல் முனிசிபாலிட்டி சேர்மன் கலாநிதி, கமிஷனர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நகராட்சி துப்புரவு அலுவலர்கள், ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Aug 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...