/* */

ராசிபுரம் அருகே தோட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே தோட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து, கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

ராசிபுரம் அருகே தோட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி உயிரிழப்பு
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, பச்சுடையாம்பாளையம் பஞ்சாயத்து மூலக்காடு குமாரபாளையத்தார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (53). விவசாயி. இவரது மனைவி கீதா (39). இவர்களுக்கு பிரதீவ் என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சிவக்குமார் தனது நிலத்தில் தக்காளி பயிர் செய்துள்ளார். தற்போது செடிகளில் தக்காளி செடிகளில் காய் பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் கோடை மழையால் சேதமடையாமல் இருக்க, தக்காளி செடிகளுக்கு அருகில் மரக் குச்சிகளை நட்டு வைக்க முடிவு செய்தார். இதற்காக டிராக்டரில் மரக் குச்சிகளை ஏற்றிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

சிவக்குமார் டிராக்டரை ஓட்டிச்செல்ல அவரது மனைவி கீதா அவருக்கு அருகே உட்கார்ந்து சென்றார். பின்னர் குச்சிகளை தோட்டத்தில் இறக்கி வைத்து விட்டு, வீட்டிற்கு செல்ல டிராக்டரில் ஏறினர். அப்போது கணவருக்கு பதிலாக கீதா டிராக்டரை ஓட்டி உள்ளார். அந்த பகுதியில் நேற்று பெய்த மழையால் மண்பாதை சேறும், சகதியுமாக இருந்ததால் அதில் வந்த டிராக்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் சென்றுவிட்டது.

இதில் நிலைதடுமாறி டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீழே விழுந்து, டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட சிவக்குமார் மற்றும் கீதா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து, டிராக்டரை தூக்கி அப்புறப்படுத்தி 2 பேரின் உடல்களையும் மீட்டனர். சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமார், கீதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 April 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...