நாமக்கல் மாவட்டத்தில் இன்று 55 சிறப்பு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 55 மையங்களில் மொத்தம் 20,000 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை மற்றும் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 55 மையங்களில் மொத்தம் 20,000 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை மற்றும் கோவாக்சின் இரண்டாம் தவனை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீட்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படும் மையங்கள் விபரம்:
நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொ.ஜேடர்பாளயைம் தொடக்கப்பள்ளி,
கொல்லிமலை வட்டாரம்: செம்மேடு பழைய யூனியன் ஆபீஸ் கட்டிடம், வளப்பூர் நாடு நடுநிலைப்பள்ளி.
சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, அலங்காநத்தம், பவித்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
மோகனூர் வட்டாரம்: பாலப்பட்டி, மோகனூர், ஆலம்பட்டி, வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
நாமக்கல் வட்டாரம்: செம்பாறைப்புதூர் மினி கிளினிக், லக்கநாய்க்கன்பட்டி சுகாதார மையம், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், கருப்பட்டிபாளையம் தொடக்கப்பள்ளி.
திருச்செங்கோடு வட்டாரம்: இறையமங்களம், சித்தளந்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பரமசிவகவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி, மண்குட்டைபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி.
பள்ளிபாளையம் வட்டாரம்: எலந்தக்குட்டை, காடச்சநல்லூர், கல்லாங்காட்டுவலசு, கொக்கராயன்பேட்டை, பல்க்காபாளையம், படவீடு, பள்ளிபாளையம் நகராட்சி, குமாரபாளையம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
வெண்ணந்தூர் வட்டாரம்: ஓலைப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், அத்தனூர், கல்லாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
இராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர், வடுகம், சிங்களாந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
புதுச்சத்திரம் வட்டாரம்: வினைதீர்த்தபுரம், ஏளூர், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
எலச்சிபாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், எலச்சிபாளையம் தொடக்கப்பள்ளி, ஜேடர்பாளையம் தொடக்கப்பள்ளி.
மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமோடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
ஆகிய இடங்களில் கோவிஷீல்டுமுதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படுகிறது.கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்படும். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.
கோவாக்சின்:
கீழ்க்கண்ட 18 மையங்களில் 13,800 பேருக்கு கோவாக்சின் 2வது தவனை மற்றும் கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு போடப்படுகிறது.
திருச்செங்கோடு,சீத்தாரம்பாளையம், பிள்ளாநல்லூர், ராசிபுரம், எலந்தக்குட்டை, மரக்கால்காடு, எர்ணாபுரம், நாமக்கல் கோர்ட், நாமக்கல் நகராட்சி, நாமகிரிப்பேட்டை, நல்லூர், பரமத்தி, மோகனூர், மாணிக்கம்பாளையம், மல்லசமுத்திரம் மற்றும் டிவிஎஸ் மையம் ஆகிய இடங்களில் கோவாக்சின் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படுகிறது.