/* */

வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ கைது

நாமக்கல் அருகே வழக்கில் இருந்து விடுவிடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ கைது
X

சண்முகம்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக சண்முகம் (56) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாணத்தி அருகே உள்ள செலம்பாகவுண்டம் பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது அடிதடி வழக்கு இருந்துள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று எஸ்.ஐ சண்முகம், செல்வகுமாரிடம் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதனடிப்படையில், இன்று காலை, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் மாணத்தி கிராமத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு எஸ்.ஐ சண்முகத்திடம், செல்வகுமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்போது போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட எஸ்.ஐ சண்முகத்தின் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்