/* */

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டுக்கன்று குட்டியை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
X

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டுக் கன்றுக்குட்டியை, தீயணைப்புத்துறையினர் கயிறு மூலம் உயிருடன் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகில் உள்ள தளிகை கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி, விவசாயி. அவருக்கு சொந்தமான தோட்டம் வீட்டிற்கு அருகில் உள்ளது. அவர் பசுமாடு வளர்த்து வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் அவருக்கு சொந்தமான பசுமாட்டின் கன்றுக்குட்டி அந்தப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தது. திடீரென்று காணவில்லை. அவர் சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தார். அப்போது அருகில் உள்ள கிணற்றில் அந்த கன்றுக்குட்டி தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

அவர் இது குறித்து நாமக்கல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கயிற்றில் கட்டி, கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு மேலே கொண்டுவந்தனர். தீயணைப்புத்துறைக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 27 Jun 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...