/* */

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த சமூக நீதி கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சமூக நீதி கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த சமூக நீதி கூட்டமைப்பு கோரிக்கை
X

நாமக்கல்லில் ஓபிசி சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பி.சி, எம்.பி.சி, டி.என்.டி சமூகங்களின், சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. தொட்டியநாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தொட்டிய நாயக்கர், குரும்ப கவுண்டர், முத்தரையர், போயர், கொங்கு வேளாளர், ஜங்கமர், ஆண்டிபண்டாரம், நாவிதர், வண்ணார் உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசு, சென்செஸ் சட்டத்தின் படி, 2021 சென்செஸ் கணக்கெடுப்பில், ஓபிசி பிரிவில், ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் சேர்க்க வேண்டும். மாநில அரசு, புள்ளி விபர சட்டப்படி 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை பாதுகாக்க உடனடியாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆகஸ்ட் 7-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள சமூகநீதி மாநாட்டில் அனைத்து சமுதாயத்தினரும் திரளாக கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கணேஷ் நன்றி கூறினார்.

Updated On: 14 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’