Begin typing your search above and press return to search.
சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனுக்கு நெல் அரவை செய்திட விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு அரசின் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு நெல் அரவை செய்து வழங்கிட, தனியார் அரவை ஆலைகள் விண்ணப்பிக்கலாம்.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல், அரசு கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான, விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் (டிஎன்சிஎஸ்சி) அரவை முகவர்கள் (முழு நேர / பகுதி நேரம்) மற்றும் கார்ப்பரேசனில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. எனவே, சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ள, தனியார் அரவை ஆலை உரிமையாளர்கள் தங்களது விருப்ப கடிதத்தினை டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, டிஎன்சிஎஸ்சி மண்டல மேலாளர் அலுவலகத்தை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.