/* */

புதுச்சத்திரம் அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

புதுச்சத்திரம் அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே கோழிப்பண்ணை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பி.ஆயிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (38), அவரது மனைவி திவ்யா. தங்கதுரை அங்கு உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தி அடைந்த தங்கதுரை, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து, புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது