ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது

Erode news- கைதான இருவரை படத்தில் காணலாம்.
Erode news, Erode news today- ஈரோட்டில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு திண்டல் பாலாஜி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா (வயது 54). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 1ம் தேதி இருசக்கர வாகனத்தில் சிவன் நகர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஆசிரியை பரிமளா கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.
இதுகுறித்து, ஆசிரியை பரிமளா அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பவளத்தாம்பாளையத்தில் தாலுகா போலீசார் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை, தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 26), திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த ஜனா என்கிற ஜனகராஜ் என்பதும், இவர்கள் இருவரும் ஆசிரியை பரிமளாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு பவுன் நகையையும், இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu