ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னனோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
HIGHLIGHTS
ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த ஆடி அமாவாசை நாளில், இறந்துபோன முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை பலர் நீண்ட காலமாக கடைபிடித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆண்டு தோறும் .
நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயில் அருகில், காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். பாலப்பட்டி, பரமத்திவேலூர், ஜேடர்பளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி வழிபட்டனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் ஆற்றோரம் கோயில்கள் உள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.