/* */

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்: பொதுமக்கள் புகார்

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்: பொதுமக்கள் புகார்
X

நாமக்கல் நகராட்சி 39வது வார்டு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி பாதியில் விடப்பட்டுள்ளதால் சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாமல், கற்கல் குவியலாய் கிடக்கின்றன.

நாமக்கல் :

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளிலும் ஜேடர்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்றது. இதனால் சாலைகளில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றது. எனவே, சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆட்சியில் துவக்கப்பட்டது. இதில் சுமார் 75 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளன. நாமக்கல் முல்லை நகர், அழகு நகர் போன்ற பகுதிகளில் தசர் சாலை அமைப்பதற்காக, கான்ட்ராக்டர்கள் ரோட்டை பொக்லைன் வாகனம் மூலம் தோண்டிப் போட்டுள்ளனர்.

ஆனால் பணிகள் எதுவும் நிறைவு பெறவில்லை. தார் சாலைகள் முழுவதும் கற்கள் குவியலாய் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இடறி விழுகின்றனர். மேழும் வாகனங்கள் பஞ்சர் ஏற்படுகிறது. எனவே பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நகராட்சிக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...