/* */

அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
X

ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகள்.

அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கரமிப்பு செய்துள்ளனர். அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அருகே உள்ள குரும்பபாளையம்மேடு குசிலாம்பாறை பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் விவசாயம் செய்துள்ளார். தொடர்ந்து, நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பலமுறை நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும், அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தொடர்ந்து விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவிப் பொறியாளர் கிருபாகரன், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் வெள்ளித்திருப்பூர் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கரமிப்பு செய்துள்ள நீர்நிலை புறம்போக்கினை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்டனர்.

அப்போது, ஆக்கிரமிப்பு செய்தவர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தபோதிலும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 18 May 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு