/* */

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: மாவட்ட வன அதிகாரி விளக்கம்

கொல்லிமலை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: மாவட்ட வன அதிகாரி விளக்கம்
X

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை நாமக்கல் மாவட்ட வன அதிகாரி விளக்கம்.

கொல்லிமலை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியுள்ளதாவது: திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே ஆங்கியம் கிராமத்தில், சிறுத்தை கடித்ததில் படுகாயம் அடைந்த 2 பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உலவி வந்த சிறுத்தை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனப்பகுதியில் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கொல்லிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கொல்லிமலை, புளியஞ்சோலை உள்ளிட்ட வனப்பகுதிக்குள் சிறுத்தை நுழைந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது கண்காணிக்கவோ எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்தல், கேமரா மூலம் கண்காணிப்பு செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கொல்லிமலையில் உள்ள அனைத்து அருவிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Updated On: 2 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்