/* */

ஈமு பண்ணை மோசடி வழக்கு: தலைமறைவு நபர் குறித்து தகவல் அளிக்க போலீஸ் வேண்டுகோள்

ஈமு பண்ணை மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நபர் குறித்து தகவல் அளிக்க போலீஸ் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈமு பண்ணை மோசடி வழக்கு: தலைமறைவு நபர் குறித்து தகவல் அளிக்க போலீஸ் வேண்டுகோள்
X

பைல் படம்

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமலதா கூறியுள்ளதாவது:

கடந்த 2012 ம் ஆண்டு, நாமக்கல்-சேலம் ரோட்டில் எஸ்.ஆர்.ஒய் என்ற ஈமு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தை, ஜம்புகுமாருடன் இணைந்து சந்தோஷ் என்பவரும் நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து பணத்தை முதலீடாகப் பெற்று மோசடி செய்து விட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ் கோர்ட்டில் ஆஜராக வாய்தா போடப்பட்டது.

ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் கோர்ட் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. சந்தோஷ் எங்கு உள்ளார், அவர் நண்பாகள், உறவினர்கள் வீடுகளுக்கு வருவது தெரிய வந்தால் உடனடியாக நாமக்கல் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலக தொலைபேசி 04286-281372 மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Aug 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  10. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை