/* */

தீபாவளிக்கு ரூ.2.43 கோடி இனிப்புகள் விற்பனை செய்ய நாமக்கல் ஆவின் இலக்கு

தீபாவளிக்கு ரூ.2.43 கோடி இனிப்புகள் விற்பனை செய்ய நாமக்கல் ஆவின் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தீபாவளிக்கு ரூ.2.43 கோடி இனிப்புகள் விற்பனை  செய்ய நாமக்கல் ஆவின் இலக்கு
X

நாமக்கல் ஆவின் சார்பில் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

நாமக்கல் ஆவின் மூலம் தீபாவளி ஸ்வீட் விற்பனையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஆவின் மூலம் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழக அரசு சார்ந்த நிறுவனங்கள் தீபாவளி பண்டிகைக்காக, ஆவின் மூலம் ஸ்வீட் ரகங்கள் வாங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆவின் ஸ்வீட் விற்பனை அதிகரித்தது. இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஆவின் ஸ்வீட் ரகங்களை விற்பனை செய்ய பால் வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையொட்டி மாநிலம் முழுவதும் ஆவின் ஸ்வீட் ரகங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் இனிப்பு வகைகள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:-

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், 2018ம் ஆண்டு டிச. 17 முதல், சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனியாக செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம், பால், நெய், பால் கோவா, பாதாம் மிக்ஸ் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தீபாவளி பண்டிகைக்கென தரமாக தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், சிறந்த தரத்துடன், புதியதாகவும், தூய்மையானதாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கடந்தஆண்டு, தீபாவளி பண்டிகைக்கு, நாமக்கல் ஒன்றியம் மூலம், ஆவின் பால் உப பொருட்கள், நெய் உள்ளிட்ட பொருட்கள் ரூ. 85 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்ய, நாமக்கல் ஒன்றியத்துக்கு, விற்பனை இலக்காக ரூ. 2.43 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஆவின் தயாரிப்புகளான நெய், பால்கோவா, மைசூர்பாகு, அல்வா, மில்க் கேக் போன்ற இனிப்பு வகைகள் மற்றும் இதர இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம், சென்னை, சேலம் கரூர், கோவை, ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய ஒன்றியங்களில் இருந்து, நாமக்கல் ஒன்றியம் கொள்முதல் செய்து, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இனிப்பு வகைகளின் விலை: பால்கோவா 250 கிராம் ரூ. 130 , மைசூர்பாகு- 250 கிராம் ரூ. 140, பால் அல்வா - 250 கிரா ரூ. 120, மில்க் கேக்- 250 கிராம் ரூ. 120. ஆவின் இனிப்பு வகைகள் தேவைப்படுவோர் 96590 89008, 86108 83002, 99765 35555 என்ற மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Oct 2022 5:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்