விபத்துக்குள்ளானவர்களை அலைக்கழித்த குமாரபாளையம் எஸ்.எஸ்.ஐ : ஆயுதப்படைக்கு மாற்றம்
விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பாமல், தேவையின்றி விசாரணை என்ற பெயரில் காக்க வைத்த குமாரபாளையம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35), தண்டராம்பேட்டையை சேர்ந்தவர் பெரியசாமி (37). கட்டிட தொழிலாளர்களான இருவரும், கடந்த 21ம் தேதி, கோவைக்கு கட்டிட வேலைக்காக , பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். பைக்கை ராமச்சந்திரன் ஓட்டினார்.
சம்பவத்தன்று மாலை 5 மணிக்கு, சேலம்–கோவை பைபாஸ் ரோட்டில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். குமாரபாளையம் காவிரி பாலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் பைக், அவ்வழியாக சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கால் துண்டிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த குமாரபாளையம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ. அத்தியப்பன், வலியால் துடித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பவில்லை.
மாறாக, அவர்களிடம், பெயர் என்ன, ஊர் என்ன, எதற்கு வெளியூர் செல்கின்றீர் என்று தேவையற்ற முறையில் விசாரனை நடத்தி அவர்களை காக்க வைத்து விசாரனை நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து, சம்மந்தப்பட்ட எஸ்.எஸ்.ஐ. அத்தியப்பனிடம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, எஸ்.எஸ்.ஐ., அத்தியப்பனை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.