நாமக்கல் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஒரு வாரத்தில் ஜல்லிக்கட்டு
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஒரு வாரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சீசனில் பல்வேறு நகரங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். தற்போது மதுரை வட்டாரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக ஜல்லலிக்கட்டுப் போட்டிகளை நடத்த கோர்ட் மற்றும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது குறைந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கால்நடைத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் பள்ளிபாளையம், குமாரபாளையம், பொட்டிரெட்டிப்பட்டி, முள்ளுக்குறிச்சி ஆகிய 4 இடங்களில், அரசு விதிமுறைகளின்படி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தயாராக உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான கால அவகாசம் குறித்து இன்னும் கலெக்டர் அறிவிக்கவில்லை. அனுமதி கிடைத்ததும் தகுதியான இடங்களில் ஒரு வாரத்துக்குள் ஜல்லிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.