பெதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 370 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.