/* */

பெதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

பெதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
X

நாமக்கல் கலெக்டர் அலுலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 370 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!