மரவள்ளி பயிரில் செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை
மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. நாமக்கல் வட்டாரத்தில் நிலவி வரும் பருவநிலை காரணமாக மரவள்ளி பயிரில் தற்போது, செம்பேன் பூச்சி தாக்குதல் பரவி வருகிறது. இந்த நோய் தாக்கிய மரவள்ளி செடிகளின், இலைகளின்அடியில் பூச்சிகள் காணப்படும். இலைகள் பச்சயம் இழந்து காய்ந்துவிடும். பின்னர் இலைகள் உதிர்ந்து, செடி காய்ந்துவிடும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படும்.
மரவள்ளிப் பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஓபரான் பூச்சிக்கொல்லி மருந்தை 2 மி.லிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். அல்லது புரோப்பர் கைடு மருந்தை 2 மி.லிக்கு 1 லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு நாமக்கல் தோட்டக்கலை அலுவலர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.