/* */

நாமக்கல்லில் பண்ணைக்கழிவுகள் மறுசுழற்சி குறித்து இலவச பயிற்சி முகாம்

Free Training-நாமக்கல்லில் பண்ணைக்கழிவுகள் மறு சுழற்சி குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

Free Training | Farm Waste
X

பண்ணைக்கழிவுகளை உரமாக்குவது பற்றி விவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

Free Training- நாமக்கல் வேளாண்மைஅறிவியல் நிலையம் (கே.வி.கே) மற்றும் திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்துடன் இணைந்து பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்து மக்கும் உரமாக்குதல் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. பாசன மேலாண்மை பயிற்சிமைய இணை இயக்குநர் அழகுநாகேந்திரன், பாசனநீர் தரத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்கும் உரத்தின் பயன்பாடு குறித்து பேசினார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை பண்ணைக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து உதவிப்பேராசிரியர் முத்துசாமி பண்ணைக் கழிவுகளை தரமான முறையில் சேகரித்து சேமித்து மக்கும் உரம் தயாரித்தல் குறித்து தொழில்நுட்ப விளக்கம் அளித்தார்.உதவிப்பேராசிரியர் சத்யா, பாசன மேலாண்மை பயிற்சி மைய துணை இயக்குநர் வசந்தா, உதவி இயக்குநர் சுகன்யா தேவி மற்றும் வேளாண் அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மொத்தம் 41 விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 July 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு