/* */

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திமுக தில்லுமுல்லு: முன்னாள் அமைச்சர் தங்கமணி

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திமுக தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திமுக தில்லுமுல்லு: முன்னாள் அமைச்சர் தங்கமணி
X

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல்லில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ போராட்டத்திற்கு தலைமை வகித்து பேசுகையில், தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையான வெற்றி அல்ல செயற்கையான வெற்றி. உள்ளாட்சித்தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் மாநில தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ஆளும் திமுக அரசு அதிகாரிகளை மிரட்டி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து செயற்கையான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

உண்மையாக தேர்தல் நடந்திருந்தால், நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதைக் காட்டு விவிபேட் இயந்திரத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். கள்ள ஓட்டுப்போடுவதற்காக அவர்கள் அதை பயன்படுத்தவில்லை. மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் ஓட்டுப்போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் அந்த நேரத்தில், திமுகவினர் கள்ள ஓட்டுகளைப் போட்டு செயற்கையான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

சென்னையில் கள்ள ஓட்டுப்போட முயன்றவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது அவர் வெளியே வரக்கூடாது என்பதற்காக மேலும் பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். எத்தனை பேரை கைது செய்தாலும், அதிமுகவினர் யாரும் பயப்படமாட்டார்கள். கடந்த 1996ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. ஆனால் 2 ஆண்டு கழித்து 1998ல் நடைபெற்ற பார்லி தேர்தலில் அதிமுக பெருவாரியாக வெற்றிபெற்றது. அதே நிலைதான் தற்போதும் உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெறும் பார்லி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறினார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், பொன் சரஸ்வதி, கலாவதி, முன்னாள் நகராட்சித் துணைத்தலைவர் சேகர், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சேர்மன் ரமேஷ், அதிமுக பிரமுகர்கள் விஜய்பாபு, ஆட்டோராஜா, சுமதி, குமரன், நரசிம்மன், சன் பாலு, சந்திரன், வைரம் தமிழரசி, சேவல்ராஜூ, மயில் பழனிவேல் உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 28 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  2. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  4. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு