/* */

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - நாமக்கல் நகராட்சி சுறுசுறுப்பு

நாமக்கல் நகராட்சியில், கொரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், டிரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - நாமக்கல் நகராட்சி சுறுசுறுப்பு
X

நாமக்கல் நகராட்சி ராமாபுரம்புதூர், கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில், டிரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. தொற்று அதிகம் பாதித்த 13 பகுதிகளில் கட்டுபாட்டு மண்டலம் அமைக்கப்பட்டது. அங்கு காய்ச்சல் முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனால் தொற்று குறைந்து 13 கட்டுப்பாட்டு மண்டலம் 8 மண்டலமாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 240 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றை தடுக்கும் வகையில் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் பகுதியில், டிரோன் கருவி மூலம் வீதிகளிலும், வீடுகளுக்கு மேலும் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், இந்தப்பணியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ள கணேசபுரம், இபி காலனி, என்ஜிஓ காலனி, ஜெட்டிகுளத்தெரு, கணபதி நகர், தில்லைபுரம், துறையூர் ரோடு மற்றும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம் பகுதியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Updated On: 24 Jun 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா