Begin typing your search above and press return to search.
நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே விண்ணப்பித்த நபர்களுக்கு வருகிற 24.08.2021 அன்று மாலை 4.00 மணிக்கு வங்கிகள் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் சிறப்பு முகாம், நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சாலையோர வியாபாரிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குப்புத்தகம், ஆதார்கார்டு ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.