Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம் தொட்டியம், கோடியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் அசோக்குமார் (30), கட்டிட தொழிலாளி. இவர் நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அப்புசாமி என்பவர் புதிதாக கட்டிவரும் கட்டிடத்தில், மரக்கட்டையால் கட்டப்பட்டிருந்த சாரத்தை அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மரக்கட்டை ஒன்று அருகில் சென்ற மின்சார கம்பியில் உரசியது, இதனால் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.