/* */

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
X

திருச்சி மாவட்டம் தொட்டியம், கோடியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் அசோக்குமார் (30), கட்டிட தொழிலாளி. இவர் நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அப்புசாமி என்பவர் புதிதாக கட்டிவரும் கட்டிடத்தில், மரக்கட்டையால் கட்டப்பட்டிருந்த சாரத்தை அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மரக்கட்டை ஒன்று அருகில் சென்ற மின்சார கம்பியில் உரசியது, இதனால் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 July 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்