நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்ததை போக்க வேண்டும், ஜி.எஸ்.டி. குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தினர்.
தொடர்ந்து, பா.ஜவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாநில ஓ.பி.சி பிரிவு துணை த்தலைவர் செந்தில், நாமகிரிபேட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் புள்ளியப்பன், நாமக்கல் நகர தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் காங். தலைவர் கோபால் உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.