/* */

வரும் 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாமக்கல்லில் 20,641 மாணவ மாணவியர் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் ஏப்ரல் 6ம் தேதி துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்கின்றனர்.

HIGHLIGHTS

வரும் 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாமக்கல்லில் 20,641 மாணவ மாணவியர் பங்கேற்பு
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் ஏப்ரல் 6ம் தேதி துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13ல் துவங்கி, ஏப். 3ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச் 14ல் துவங்கி, நாளை (ஏப். 5) முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் ஏப். 6ம் தேதி, 20 ம் தேதி முடிவடைகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, மாவட்டம் முழுவதும், 94 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படை உறுப்பினர்கள், 9 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள், என மொத்தம் 2,069 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்களுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Updated On: 4 April 2023 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்