/* */

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சம் அபராதம் வசூல்

நாமக்கல் மாவட்டத்தில், போக்குவரத்து விதிமுறைகளை டூ வீலர்கள் ஓட்டியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், ஈரோடு போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ் ஆகியோர் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் ஆர்டிஓக்கள் முருகன், முருகேசன் மற்றும் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில், திடீர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சக்திவேல், நித்யா, ரவிக்குமார், பிரபாகரன், கண்ணன், முத்துசாமி மற்றும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். மொத்தம் 1,015 டூ வீலர்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 163 வாகனங்களில் விதி மீறல் கண்டறியப்பட்டு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் இயக்கப்பட்ட, 13 டூ வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனையின் போது, எப்.சி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட, 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் ஓட்டிய, டூ வீலர்களை ஓட்டியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போக்குவரத்து விதிமுறைகளை மீறி டூ வீலர்கள் ஓட்டியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On: 29 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...