நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
நாமக்கல் மாவட்டத்தில், போக்குவரத்து விதிமுறைகளை டூ வீலர்கள் ஓட்டியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், ஈரோடு போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ் ஆகியோர் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் ஆர்டிஓக்கள் முருகன், முருகேசன் மற்றும் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில், திடீர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சக்திவேல், நித்யா, ரவிக்குமார், பிரபாகரன், கண்ணன், முத்துசாமி மற்றும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். மொத்தம் 1,015 டூ வீலர்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 163 வாகனங்களில் விதி மீறல் கண்டறியப்பட்டு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் இயக்கப்பட்ட, 13 டூ வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனையின் போது, எப்.சி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட, 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் ஓட்டிய, டூ வீலர்களை ஓட்டியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போக்குவரத்து விதிமுறைகளை மீறி டூ வீலர்கள் ஓட்டியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.