/* */

இலவச பயிற்சி வகுப்பில் படித்த 60 பேர் அரசுப் பணிக்கு தேர்வு : ஆட்சியர் பெருமிதம்

இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு படித்த 60க்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

இலவச பயிற்சி வகுப்பில் படித்த 60 பேர் அரசுப் பணிக்கு தேர்வு : ஆட்சியர் பெருமிதம்
X

ராசிபுரத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு படித்த 60க்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறியல் கல்லூரியில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், பல்வேறு கல்வித்தகுதி உடைய 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 22-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான 32 நபர்களை தேர்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில், ராசிபுரம், நாமக்கல், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகளிலும், மோகனூர், பட்டணம் பேரூராட்சிகள் என 5 இடங்களில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகங்களில் மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் வகையில் அதற்குரிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மாணவர்களுக்கு அமைதியான சூழலில் பயில்வதற்கு தேவையான சிறப்பான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிவுசார் மையம் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மேலும் அங்கு இண்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்களும் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பயின்ற மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் 22 பேரும், குரூப் 2 தேர்வில் 13 பேரும், போலீஸ் எஸ்.ஐ. தேர்வில் 12 பேரும், போலீஸ் பணியிடத்திற்கு 13 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Jan 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு