/* */

நாமக்கல் மாவட்டத்தில் 5,413 பேர் தேர்வு நீட் எழுதுகின்றனர்: மாவட்ட நிர்வாகம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வில்,7 மையங்களில் மொத்தம் 5,413 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில்  5,413 பேர் தேர்வு நீட் எழுதுகின்றனர்: மாவட்ட நிர்வாகம்
X

பைல் படம்.

இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு சேர்க்க்காக நீட் நுழைவுத்தேர்வு தேசியத் தேர்வு முகமை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் மெத்தம் 3,500க்கும் அதிகமான மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் இந்தத்தேர்வு நடைபெறும். மதியம் 1.15 மணிக்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்ளின் தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும். 1.30 மணிக்கு பிறகு வருகை தருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து வரவேண்டும். முழுக்கை சட்டைகளை தவிர்க்க வேண்டும். சாதாரண செருப்புகளை அணியவேண்டும், ஷீக்கள் அணியக்கூடாது. தேர்வு மையத்திற்கு, தேர்வு நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்னாதாக வருகை தந்து கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள 7 நீட் தேர்வு மையங்களில், மொத்தம் 5,143 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களின் விபரம்: குமாரபாளையம் தாலுக்கா, பல்லக்காபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளி தேர்வு மையத்தில் மொத்தம் 1,224 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். நாமக்கல் டிரினிடி இண்டர்நேஷனல் பள்ளி மையத்தில் 576 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் அக்சரா அகடாமி பள்ளி மையத்தில் மொத்தம் 576 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 576 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். கீரம்பூர் தி நவாதயா அகாடமி பள்ளியில் 504 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சத்திரம் பாவை இன்ஜினியரிங் கல்லூரி தேர்வு மையத்தில் மொத்தம் 1,339 பேரும், நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாடமிபள்ளியில் 648 பேரும் நீட் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 மையங்களில் 5,413 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

Updated On: 16 July 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?