/* */

நாமக்கல் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி

நாமக்கல் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் விவசாயிகளுக்கு 100%  மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி
X

இது குறித்து, நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குனர் அன்புசெல்வி வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் வட்டாரப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், அரசு மானியத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்கப்படுகிறது. நுண்ணீர் பாசன முறையில், குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்யலாம்.

அதனால் நீர் விரயமாவது குறைவதோடு பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு செல்வதால் அதிக விளைச்சல் கொடுக்கும். மேலும் களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது. சொட்டு நீர்பாசனம் மூலம் உரமிடுவதால் பயிருக்கு தேவையான நீரும் ஊட்டச்சத்தும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் கிடைக்கிறது. நீர் மற்றும் உரங்கள்வீணாவது தடுக்கப்படுவதோடு அவற்றின் பயன்பாட்டு திறனும் அதிகரிக்கிறது.

மக்காசோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கும் சொட்டு நீர்பாசனம் அல்லது தெளிப்பு நீர்பாசனம் அல்லது மழைத்தூவான் போன்ற நுண்ணீர் பாசன கருவிகளும் நிறுவலாம். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைக்க, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை சான்று, சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான சான்று போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து நுண்ணீர் பாசன கருவிகளை அமைத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Jun 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?