/* */

நாமக்கல்லில் குடியரசு தின விழா ஒத்திகை

நாமக்கல்லில் குடியரசு தின விழா ஒத்திகை, காவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை

HIGHLIGHTS

நாமக்கல்லில் குடியரசு தின விழா ஒத்திகை
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், போலீசாரின் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று துவங்கியது. நாடு முழுவதும், வரும், 26ல் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இதில் ஆட்சியர் மெகராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறந்த மாவட்ட அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் இன்று காலை ஒத்திகை துவங்கியது. இதில், ஆயுதப்படையைச் சேர்ந்த ஆண், பெண் போலீசார், 95 பேர் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

Updated On: 23 Jan 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!