/* */

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 670 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான நிலையில், நேற்று ஒரேநாளில் 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 670 பேர் பாதிப்பு
X

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 58 வயது ஆண். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 19-ம் தேதி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 670 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 817 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 396 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது என்று, அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 27 May 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  2. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  5. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  7. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  8. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?