/* */

உபி.,யில் விவசாயிகள் கொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கரூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

உபி.,யில் விவசாயிகள் கொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்
X

உ.பி யில் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தும் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்பினர்.

உத்திரபிரதேசத்தில் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நடத்திய பேரணியில் மத்திய இணை அமைச்சர் மகன் சென்ற கார் மோதியது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 4 பாஜகவினர் உயிரிழந்தனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளில் 4 பேர் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை கண்டித்தும், விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சுய ஆட்சி இந்தியா, சாமானிய மக்கள் நல கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஈடுபட்டன.

ஆர்ப்பாட்டத்தில் 3 வேளாண் சட்டங்கள் குறித்து கடந்த 9 மாதங்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், உச்ச நீதிமன்றமே விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

Updated On: 4 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு