பணி நிரந்தரம்- ஊதிய உயர்வு: ஓஹெச்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கரூரில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு குறித்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
கரூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2021 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவதற்கு 1400 ரூபாய் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
பணி ஓய்வுக்கு பிறகு பணிக்கொடை, ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் நேரிடையாக ஊதியம் வழங்க வேண்டும். சேமநல நிதி பிடித்தம் செய்ய வேண்டும். 7 -ஆவது ஊதிய குழு சம்பளத்தை அமல்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.