/* */

பட்டு பூங்காவில் தறிகூடம் அமைக்கும் பணிகள் தீவிரம், ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பட்டுப் பூங்கா வளாகத்தில் நெசவாளர்களுக்கான தறிகூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்த ஆலோசனைகளை வழங்கினார்.

HIGHLIGHTS

பட்டு பூங்காவில் தறிகூடம் அமைக்கும் பணிகள் தீவிரம், ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு
X

காஞ்சிபுரத்தில் பட்டு பூங்காவில் தறிகூடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை கலெக்டர்  ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் பட்டு ஜவுளி மேம்பாட்டு துறை மற்றும் தமிழக கைத்தறி துறை பங்களிப்பு உடன் 90கோடி மதிப்பீட்டில் பட்டு பூங்கா திட்டம் துவக்க அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணி தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் பணிகளை துரிதப்படுத்த தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அண்ணா பிறந்த தினமன்று பட்டுப் பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தனர்.

இந்நிலையில் இதற்கான பணிகள் தற்போது துவங்கி தறி கூடம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று இதனை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கினர்.

வரும் செப்டம்பர் 15ம் தேதி திறக்க உள்ள நிலையில் அங்கு பணியாளர்கள் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 7 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...