Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 % மேல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 80 சதவீத பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழக முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, பச்சரிசி , வெல்லம், முந்திரி, திராட்சை, கோதுமை, ரவை, முழுநீள கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பொங்கல் பரிசு தொகுப்பு, நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சுமார் 3.8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தேவையான அனைத்து பொருட்களும் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் அனுப்பப்பட்டு, பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இதுவரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.